ETV Bharat / state

பிரியாணி ஆர்டர் கொடுப்பதுபோல் நடித்து ரூ.25ஆயிரத்தை அபேஸ் செய்த மகாதிருடன்

author img

By

Published : Nov 3, 2022, 3:36 PM IST

பூந்தமல்லி அருகே பிரியாணி ஆர்டர் கொடுப்பது போல் நடித்து ஹோட்டல் கல்லா பெட்டியில் இருந்து இருந்த 25 ஆயிரம் ரூபாயை ஒருவர் திருடிச்சென்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று (நவ.03) காலை ஊழியர் ஒருவர் உணவகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் பிரியாணி ஆர்டர் கொடுக்க வேண்டும் என ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்த போது கடை உரிமையாளரைப்பார்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதனையடுத்து, ஊழியர் கடையின் உள்ளே சென்ற நேரம் பார்த்து கல்லாப்பெட்டியில், இருந்த 25ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றார்.

பிரியாணி ஆர்டர் கொடுப்பது போல் நடித்து பணம் திருட்டு

பின்னர், இதனையறிந்த உணவக உரிமையாளர் உடனடியாக, இதுகுறித்து நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியை பின் தொடர்ந்து சென்று கழுத்தை அறுக்க முயற்சிக்கும் வாலிபர் - சிசிடிவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.